முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election: விரைவில் தேர்தல்... நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை...! மத்திய அரசு அறிவிப்பு

06:00 AM Feb 28, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 இன்று முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

Advertisement

நமது இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் எடுத்துரைத்தார். இன்று முதல் மார்ச் 6 வரை நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களில் விரிவான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்தவும், நமது இளைஞர் சக்தியை ஊக்குவிக்கவும், வாக்களிப்பதன் மதிப்பை அவர்களுக்கு வலியுறுத்தவும், அதிக பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான தேர்தல் செயல்முறைகளில் பங்கேற்கவும் அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் , உயர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்படும், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பு நடவடிக்கைகள் அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். Mygov தளத்தில் கள நேரடிப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் போட்டிகள் நடைபெறும்.

English Summary: 2024 in higher educational institutions from today to March 6 for the “My First Vote for the Country” campaign

Advertisement
Next Article