For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய இருவர் கைது.! சைபர் கிரைம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை.!

03:02 PM Feb 20, 2024 IST | 1newsnationuser4
இளம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய இருவர் கைது   சைபர் கிரைம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் பெண் உடனே புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இது குறித்து புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary: Pondicherry woman has been harassed by 2 men in Instagram. They were arrested by cyber crime officials for sending obscene messages and pictures to her.

Read more: https://1newsnation.com/a-man-was-murdered-by-a-woman-and-her-lover-for-asking-to-repay-the-debt/

Tags :
Advertisement