முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி...! 17,18,19 ஆகிய தேதிகளில் 1,875 சிறப்புப் பேருந்து இயக்கப்படும்...! போக்குவரத்து துறை அறிவிப்பு...!

06:10 AM May 16, 2024 IST | Vignesh
Advertisement

வாரயிறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி சேவைகளுடன் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 1,875 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

Advertisement

போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை 555 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 645 பேருந்துகளும், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை 280 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article