முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பாஸ்' என்று அழைக்காததால் நேர்ந்த சோகம்.! சிறுவனுக்கு கத்திக்குத்து.!அதிர்ச்சி சம்பவம்.!

01:03 PM Feb 11, 2024 IST | 1newsnationuser4
Advertisement

போபாலில் மைனர் சிறுவன் தன்னை 'பாஸ்' என்று அழைக்க மறுத்த 18 வயது நபரை கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

போபாலில் உள்ள ஜஹாங்க்ராபாத்தில், ஜூநேட் கான் மற்றும் அவரது இளைய சகோதரர் ஷாத் கான் ஆகிய இருவரும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மைனர் சிறுவன் ஒருவரை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அப்போது அந்த சிறுவன் தனது பெயருக்கு முன்பு 'பாஸ்' என்ற வார்த்தையை சேர்த்து கூப்பிடுமாறு கூறியிருக்கிறார். அதற்கு ஷாத் கான் மறுத்த நிலையில், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.

தான் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து ஷாத் கானை அந்த சிறுவன் தாக்கியுள்ளார். தன்னை தற்காத்துக் கொள்ள ஷாத் கான் கையை தூக்கிய போது, அவரது மணிக்கட்டிலும் காயம் பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

பின்பு அந்த சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டதாகவும் கூறினார். காவல்துறையில் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் புகார் அளித்திருப்பதாகவும், இது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :
bhopalDisputesknifeminorpolice investigationstab
Advertisement
Next Article