For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிவகங்கை: "என்னடா கட்டிங் இது".! 15 வயது சிறுவனின் உயிரை பறித்த 'பாக்ஸ் கட்டிங்'.! தந்தை திட்டியதால் விபரீத முடிவு.!

05:45 PM Jan 29, 2024 IST | 1newsnationuser7
சிவகங்கை   என்னடா கட்டிங் இது    15 வயது சிறுவனின் உயிரை பறித்த  பாக்ஸ் கட்டிங்    தந்தை திட்டியதால் விபரீத முடிவு
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டி இருக்கிறான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை மகனை திட்டியதோடு நன்றாக முடியை குறைத்து வெட்ட வைத்திருக்கிறார். இதனால் சிறுவன் மன உளைச்சலில் இருந்திருக்கிறான்.

இதனைத் தொடர்ந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முடி வெட்டும் தகராறில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement