முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்: 15 வயது சிறுமி; 5 பேர்‌ கூட்டு பாலியல் வன்புணர்வு.! 2 பேர் கைது 3 பேர் தப்பி ஓட்டம்.!

12:14 PM Dec 06, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமி 5 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.

Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர் .

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரிஷாந்த் மற்றும் சூர்யா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று இளைஞர்களையும் காவல்துறை தேடி வருகிறது. கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் கருதப்பட்ட நிலையில் இது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
5 young mangang rapeminor girlpolice arrestsivagangai
Advertisement
Next Article