For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வகுப்பறையில் சுட்டு கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி.! பழி தீர்த்த காதலன்.!

01:05 PM Dec 13, 2023 IST | 1newsnationuser4
வகுப்பறையில் சுட்டு கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி   பழி தீர்த்த காதலன்
Advertisement

பீகார் மாநிலத்தில் வகுப்பறையில் வைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த மாணவனை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவனிடம் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் உள்ள கோச்சிங் கிளாசில் மாணவ மாணவிகள் பயின்று வந்துள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அந்த மாணவி தனது காதலனை அடித்து அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது காதலியை பழி வாங்குவதற்காக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் வகுப்பறைக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவன் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மாணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பயிற்சி வகுப்பில் 12ஆம் வகுப்பு மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement