முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10, 12ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது..? மே 20...!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

08:02 AM May 04, 2024 IST | Chella
Advertisement

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை, நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement

இதற்கிடையே, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருப்பது போன்ற சுற்றறிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், அந்த சுற்றறிக்கை போலியானது என தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Read More : இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement
Next Article