முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election: 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல்...!

06:10 AM May 12, 2024 IST | Vignesh
Advertisement

நாளை நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு 7-ம் தேதி நடைபெற்றது.

Advertisement

நாளை நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட தேர்தலுக்காக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நான்காம் கட்டத்தில், தெலங்கானாவில் அதிகபட்சமாக 17 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்பு மனுக்களும் அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 1103 வேட்பு மனுக்களும் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்பு மனுக்களும் நல்கொண்டா மற்றும் போங்கிர் தொகுதியில் தலா 114 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 1717 ஆகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article