For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண் ஆளுமைக்கான "சக்தி விருதுகள் 2024"..! நாளை, உலக மகளிர் தினத்தன்று ஒளிபரப்பு..!

12:21 PM Mar 07, 2024 IST | 1Newsnation_Admin
பெண் ஆளுமைக்கான  சக்தி விருதுகள் 2024     நாளை  உலக மகளிர் தினத்தன்று ஒளிபரப்பு
Advertisement

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான புதிய தலைமுறை செய்தி நிறுவனம், பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு ஆண்டு தோறும் சக்தி விருதுகள் என்ற பெயரில் விருதுகளை வழங்கிவருகின்றன.

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான சக்தி விருதுகள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் இசையில், பெண் சக்தியின் பெருமையைப் பறைசாற்றும் சிறப்புப் பாடலோடு இந்த விழா ஆரம்பிக்கப்பட்டது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில் புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்திய நாராயணன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரி வேந்தர், முன்னாள் இந்திய கபடி வீரர் மற்றும் இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இந்தியாவின் முதல் குதிரை ஏற்ற வீரர் ரூபா குன்வர் சிங், திரைப்பட இயக்குநர் ஹலிதா ஷமீம், Shalom Med Education நிறுவனத் தலைவர் அனிதா காமராஜ், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் அவரது மனைவி ராஜ்வி கார்த்திக், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, Pradee Queen Holiday Resorts நிறுவனர் மற்றும் CEO முரளி, ஐநாவின் அகதிகளுக்கான மனிதவள மேம்பாட்டுத் துறை உறுப்பினர் ஸ்ரீவித்யா, மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் காதம்பரி உமாபதி, நடிகை சங்கராபரணம் ராஜலக்ஷ்மி, கவிஞர் இளம்பிறை,

இயக்குநர் வசந்தபாலன், Femi9 Healthcare நிறுவனர் கோமதி, நடிகை அபர்ணதி, லோட்டஸ் வுமன் கேர் மருத்துவமனை தலைவர் உஷா நந்தினி, கனரா வங்கியின் அலுவல் சாரா இயக்குநர் நளினி பத்மநாபன், எஸ்.ஆர்.எம். பப்ளிக் ஸ்கூல் & எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் இயக்குநர் மங்கை சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் சி.ஓ.ஓ டாக்டர் சந்திரசேகர், சூர்யா பட்டு சென்டர் இணை நிறுவனர் & சி.இ.ஓ மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த சக்தி விருதுகள் நிகழ்ச்சி நாளை (மார்ச் 8) மாலை 5 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது

2024 சக்தி விருதுகளை பெற்றுக்கொண்ட பெண் ஆளுமைகள்:
1.MS சுவாமிநாதன் அறக்கட்டளைத் தலைவர், WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் புலைமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
2. மாற்றுப் பாலினத்தை சேர்ந்த திருநங்கை பிரியா பாபு அவர்கள் கருணைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
3. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகார் சாஜி அவர்கள் தலைமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
4. தீயணைப்புத் துறையில் சிறந்து விளங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் துணிவிற்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
5. சதுரங்க வீராங்கனை வைஷாலி அவர்கள் திறமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
6. பத்மஸ்ரீ பட்டம் பெற்ற 108 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் அவர்கள் 'வாழ்நாள் சாதனை'க்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.

Read More: இந்தியாவின் ரூ.1 இங்கு ரூ.500க்கு சமம்!… 1000 ரூபாயில் கோடீஸ்வரர் ஆகலாம்!… எந்த நாட்டில் தெரியுமா?

Tags :
Advertisement