முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழப்பு...! கண்கலங்கி நின்ற அமைச்சர் பொன்முடி...!

12:03 PM Apr 06, 2024 IST | Vignesh
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த செய்தியை கேட்டு கண்கலங்கி நின்ற அமைச்சர் பொன்முடி.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. அவருக்கு ஒரு மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான புகழேந்தி போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோல்வியை தழுவினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். திமுகவில் அனுபவம் மிக்க அரசியல்வாதியான அவரது இறப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு வந்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நிர்வாகிகள் கண்கலங்கி நின்றனர்.

Advertisement
Next Article