தமிழகமே...! இன்று இறைச்சி மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு...!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப்பிரிவு கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய நாள் முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் இன்று அரசு உத்தரவின்படி மூடப்படும். இதேபோல், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும். அத்துடன் அந்தப் பகுதியில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேபோல் இன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.