For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அலறி துடித்த மனைவி.! மூக்கை கடித்த கணவன் .! 6 பேர் மீது வழக்குப்பதிவு.!

05:15 AM Dec 23, 2023 IST | 1newsnationuser4
அலறி துடித்த மனைவி   மூக்கை கடித்த கணவன்    6 பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக கணவன் உட்பட ஆறு பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்.

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மீ(22). இவருக்கு நாஜிம் என்பவருடன் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் கணவர் நாஜிம் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

வரதட்சனை கொடுமையால் அஜ்மியை அவரது மாமியார் கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும் கணவர் நாஜிம் தனது மனைவியின் மூக்கை கடித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அந்த பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரில் தனது கணவர் மாமியார் உட்பட 6 பேர் வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்து வருவதாகவும் தனக்கும் கணவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தனது மூக்கை கடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement