For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணன் என்னடா தம்பி என்னடா.? சொத்து தகராறில் படுகொலை செய்யப்பட்ட தம்பி.! அண்ணன்களுக்கு வலைவீச்சு.!

01:11 PM Dec 12, 2023 IST | 1newsnationuser4
அண்ணன் என்னடா தம்பி என்னடா   சொத்து தகராறில் படுகொலை செய்யப்பட்ட தம்பி   அண்ணன்களுக்கு வலைவீச்சு
Advertisement

திருச்சி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன். இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியப்பா ராஜா என்பவரின் குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக இவர்களுக்கிடையே சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது .

இந்நிலையில் நேற்று இரவு முருகேசனின் பெரியப்பா மகன்களான செல்லையா பாலதுரை மற்றும் பொன்னுசாமி ஆகியோர் சொத்து தொடர்பாக முருகேசன் அவரது சகோதரர் கருப்பையா மற்றும் பிச்சை ஆகியவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் பெரியப்பா மகன்கள் முருகேசன் அவரது சகோதரர் மற்றும் உறவினரை அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். இதில் மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்ட உறவினர்கள் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த கருப்புசாமி மற்றும் பிச்சை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இறந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லையா பால் துறை மற்றும் பொன்னுசாமி ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சொத்து தகராறில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
Advertisement