For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உல்லாசத்திற்கு பிறகு பாலியல் தொழிலாளியை கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட இளைஞர்..!! பரபரப்பு வாக்குமூலம்..!!

He said that he took the young woman's brain alone and fried it with onions and tomatoes and ate it.
07:21 AM Sep 20, 2024 IST | Chella
உல்லாசத்திற்கு பிறகு பாலியல் தொழிலாளியை கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட இளைஞர்     பரபரப்பு வாக்குமூலம்
Advertisement

சென்னை துரைப்பாக்கத்தில் குமரன் குடில் 1-வது பிரதான சாலை, 3-வது குறுக்கு தெரு சந்திப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்கு வேலைக்கு வந்த பணியாளர்கள், வீட்டின் வாசலில் ரத்த கறையுடன் சூட்கேஸ் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சூட்கேஸை திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். பின்னர், இதுகுறித்த விசாரணையை தொடங்கினர்.

Advertisement

பின்னர், அருகில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் சூட்கேஸை வைத்துச் சென்றது துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர், குடில் 1-வது பிரதான சாலையில் வசித்து வரும் மணிகண்டன் (26) என்ற இளைஞர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிகண்டன் ஒரு பொறியாளர். சிவகங்கையை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வருகிறார். இவர் பாலியல் தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். அடிக்கடி பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இவரது அக்கா, மாமா ஆகியோர் திருவையாறு சென்றிருக்கிறார்கள்.

இதையடுத்து, மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் மணிகண்டன். 3 நாட்கள் தன்னுடன் தங்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் ரூ.18,000 தருவதாக கூறியிருக்கிறார். இவர் அழைத்தபடி 3 நாட்கள் இளம்பெண் தங்கியிருக்கிறார். ஆனால், மூன்றாவது நாள் அப்பெண் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றும், எனவே பேசிய பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், மணிகண்டனோ வெறும் ரூ.12,000 மட்டும் கொடுத்து அனுப்ப முயன்றுள்ளார். அப்போது தான் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுத்தியல் மூலம், இளம்பெண்ணின் மண்டையை உடைத்துள்ளார். இதில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அன்றிரவு முழுவதும் சடலத்துடன் இருந்த மணிகண்டன், அடுத்த நாள் பெரிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி, அதில் இளம்பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு கட்டுமானம் நடைபெறும் பகுதியில் வீசியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, இளம்பெண்ணின் மூளையை மட்டும் தனியாக எடுத்து அதை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்ட போலீசார் பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Read More : குலதெய்வத்தை மறந்து இஷ்ட தெய்வத்தை வணங்கினால் என்ன ஆகும்..? இந்த தவறை நீங்களும் செய்யாதீங்க..!!

Tags :
Advertisement