For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை! கட்டாய கல்யாணத்தால் நேர்ந்த விபரீதம்!

07:49 PM Apr 04, 2024 IST | Baskar
கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை  கட்டாய கல்யாணத்தால் நேர்ந்த விபரீதம்
Advertisement

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால்அவளை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்தனர். பின்னர், காவல் நிலைய வாசலில் உள்ள கோவிலில் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் , இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறி உள்ளார். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement