BREAKING: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் முதல் இடம் சென்ட்ரல் ரயில் நிலையம்தான். இப்படி தலைநகர் சென்னையின் அடையாள சின்னமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் இந்த ரயில் நிலையத்தை கடக்காமல் பணிக்கு செல்ல முடியாது. அப்படி ஹாட்ஸ்பாட் இடமாக இருக்கும் இந்த இடத்தில் இன்று காலை மிகவும் பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
மக்கள் அதிக அளவில் கூடும் சென்னை சென்ட்ரல் ரயிலை நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இளம் பெண் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட பெண் யார் என்ன காரணம் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து ரயில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.