முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சுற்றுலா சென்ற காதலர்கள்." காதலன் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம்.! 2 பேர் கைது.!

12:11 PM Nov 25, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கேரளாவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது காதலருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அந்தப் பெண்ணின் காதலன் தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு கடல் ஆறுடன் கலக்கும் பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் அங்கு வந்த இரண்டு பேர் அந்த இளம் பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பனை தாக்கி விட்டு இந்தப் பெண்ணை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக அந்தப் பெண் மற்றும் அவரது காதலன் அளித்த பேரில் காவல்துறை விசாரணையை மேற்கொண்டது.

காவல்துறை விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞரை தாக்கி விட்டு அவரது காதலியை கடத்தி மிரட்டல் விடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலா வருபவர்கள் இது போன்ற சம்பவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
gang rapekanyakumariKeralaTourist
Advertisement
Next Article