முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி: திடீரென மாயமான இளம் பெண்.! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன.?

01:40 PM Dec 27, 2023 IST | 1newsnationuser4
Advertisement

திருச்சி மாவட்டத்தில் கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா மனோன்மணி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இவருக்கு பணப் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது இதன் காரணமாக அதிக கடன் தொல்லையில் இருந்திருக்கிறார் .

வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ரீட்டா. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலும் அவரை தேடி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரீட்டா மனோன்மணியின் சகோதரர் வில்சன் தனராஜ் தனது தங்கை மாயமானது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காணாமல் போன ரீட்டா மனோன்மணியை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Enquiry Beginspolice complaintTamilnaduTrichyYoung Woman Missing
Advertisement
Next Article