For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரசிகைக்கு பாலியல் துன்புறுத்தல் பல லட்சம் மோசடி.! சிக்கலில் சிக்கிய தளபதி விஜய்யின் உதவியாளர்.!

01:03 PM Dec 26, 2023 IST | 1newsnationuser4
ரசிகைக்கு பாலியல் துன்புறுத்தல் பல லட்சம் மோசடி   சிக்கலில் சிக்கிய தளபதி  விஜய்யின் உதவியாளர்
Advertisement

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் உதவியாளர் மீது இளம்பெண் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் நடிகர் விஜயின் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரியும் ராஜேஷ் என்ற 32 வயது இளைஞர் தனது தோழியின் மூலம் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடமிருந்து 10 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞரிடம் திருமணமானது பற்றி கேட்டபோது தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராஜேஷ் தான் எந்த பெண்ணிற்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கவில்லை என்றும் அந்தப் பெண்தான் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement