முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பார்ட்டியில் போதை பொருள்.. கதற கதற இளம் பெண் பாலியல் வண்புணர்வு."! இன்ஸ்டாகிராம் நண்பரின் அத்துமீறல்.!

12:48 PM Jan 27, 2024 IST | 1newsnationuser7
Advertisement

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் தனது சமூக வலைதள நண்பரால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். மும்பை நகரை 21 வயது பெண்ணிற்கு ஹீதிக் ஷா என்ற நபர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பார்ட்டிக்கு சென்ற அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது இளம் பெண்ணின் நண்பரான ஹீதிக் அந்தப் பெண் குடித்த மதுபானத்தில் அவருக்கு தெரியாமல் போதை பொருட்களை கலந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மயக்கம் அடைந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.

எனினும் அந்த இளம் பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது பெற்றோர் துணையுடன் வோர்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 326 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குற்ற சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என தெரிவித்திருக்கும் அந்தப் பெண் உங்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை எனவும் எச்சரித்திருக்கிறார். தன் போன்ற நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Tags :
instagramMumbaipolice arrestsexual assaultyoung girl
Advertisement
Next Article