For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கதற கதற கற்பழிக்கப்பட்ட இளம் பெண்.! "கணவன் கண் முன்னே நடந்த கொடூரம்.." 6 பேர் கைது.!

10:05 AM Feb 13, 2024 IST | 1newsnationuser4
கதற கதற கற்பழிக்கப்பட்ட இளம் பெண்    கணவன் கண் முன்னே நடந்த கொடூரம்    6 பேர் கைது
Advertisement

கர்நாடக மாநிலத்தில் கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது கணவருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வந்த 6 மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று உள்ளனர்.

இதனை தட்டிக் கேட்க முயன்ற அந்தப் பெண்ணின் கணவரை அடித்து துன்புறுத்தியதோடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் கணவரின் கண் முன்னே இளம் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் காவல் நிலையம் சென்று இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து தப்பியோடிய 6 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரின் கண் முன்னே இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement