முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆபாச படங்கள் எடுத்து இளம் பெண்களுக்கு மிரட்டல்.! கைது செய்யப்பட்ட 24 வயது காதல் மன்னன்.!

02:14 PM Dec 20, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பல பெண்களுடன் பழகியவர்களை காதலிப்பது போல் நடித்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்துள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி அலமேலு. இந்த தம்பதியினருக்கு அருண் பிரசாத் என்ற 24 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் அண்ணாமலை இறந்து விட்ட நிலையில் அலமேலு வெளிநாட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் அருண் பிரசாத் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பல பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பெண்களை தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை செய்ததில் பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தப்பியோடிய அருண் பிரசாத்தை வெளி மாநிலத்தில் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. மேலும் அந்த இளைஞரின் செல்ஃபோனை ரெக்கவரி செய்தபோது அதிலிருந்து பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
crimeObscene PicturesTamilnaduViolence Against WomenYouth Arrested
Advertisement
Next Article