For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"குடிச்சிட்டு வந்து அம்மாவையா அடிக்கிற."? தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்.!

11:53 AM Dec 06, 2023 IST | 1newsnationuser4
 குடிச்சிட்டு வந்து அம்மாவையா அடிக்கிற    தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்
Advertisement

குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு(58) இவரது மனைவி வசந்தாமணி. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்களுக்கு திருமணமான நிலையில் இவர்களது மகனான சதீஷ்குமார்(28) தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

காதல் திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் தனது மனைவியுடன் சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது தந்தை பாபு மது குடித்துவிட்டு வந்து தாய் வசந்த மணியை கொடுமை செய்வதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்று தந்தையை தட்டி கேட்டிருக்கிறார் சதீஷ்குமார். இதில் ஆத்திரமடைந்த பாபு மகனை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சதீஷ்குமார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகன் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
Advertisement