For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எனக்கே விபூதி அடிக்க பாத்தியா.! மாமியாருடன் கள்ள உறவு.! மருமகனை தீர்த்துக் கட்டிய மாமனார்.!

01:12 PM Dec 30, 2023 IST | 1newsnationuser4
எனக்கே விபூதி அடிக்க பாத்தியா   மாமியாருடன் கள்ள உறவு   மருமகனை தீர்த்துக் கட்டிய மாமனார்
Advertisement

மாமியாருடன் தகாத உறவிலிருந்து மருமகன் கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகமாடிய மாமனாரை கைது செய்து விசாரித்ததில் அவரிடமிருந்து பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபக்கீரப்பா. இவர் தனது மகளின் கணவரான ரோகக் கண்ணாவர் என்பவருடன் பைக்கில் செல்லும் போது விபத்து நடந்து தனது மருமகன் உயிரிழந்ததாக காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த நபர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஃபக்கீரப்பா மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்ததில் தனது மருமகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது மகளின் கணவர் தனது மனைவியுடனே தகாத உறவில் இருப்பதாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பைக்கில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு விபத்து நடந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மாமியாருடன் தகாத உறவில் இருந்ததாக மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement