முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பகீர்.. 4 ஆண்டுகளாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!!

You will be shocked to know that here a man raped his own daughter for more than four years. The police have registered a case in this regard and started searching for the 40-year-old accused.
06:38 PM Oct 11, 2024 IST | Mari Thangam
Advertisement

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Advertisement

இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று லவ்குஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது மனைவி மற்றும் 21 வயது மகளுடன் வசித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கற்பழிப்பு மட்டுமின்றி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை 18 வயதில் இருந்தே பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள தாக தெரிவித்த போலீசார் விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர்.

Read more ; நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..!! பரபரப்பை கிளப்பிய பூனம் கவுர்..!!

Tags :
madhya pradeshrape
Advertisement
Next Article