முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கு’..!! ’வழிஞ்சிட்டு நின்னா இப்படித்தான் நடக்கும்’..!!

If something happens beyond that, I will make it clear to them that I am not interested in it
02:04 PM Sep 26, 2024 IST | Chella
Advertisement

பிதாமகன், உயிர், தனம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. அண்மையில் இவர், விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”விருப்பம் இல்லாதவர்களை, யாரும் கையபுடிச்சி இழுக்க மாட்டாங்க, அந்த அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்ல.

Advertisement

நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கு. நாம சரியாக பழகினால், மற்றவர்களும் நம்மிடம் சரியாக பழகுவார்கள். பட வாய்ப்பு தராங்கனு வழிஞ்சிட்டு, சிரிச்சிட்டு நின்னா, இவங்க நம்ம எது சொன்னாலும் செய்வோம் என்று தவறாக நினைச்சிருவாங்க. இதனால், நாம சரியாக இருக்கனும்.

இதுதான் நான், பட வாய்ப்பு கொடுத்தா கொடுங்க இல்லனா வேண்டாம் என்று தெளிவா இருந்தா யாரும் நம்மகிட்ட தப்பா நடந்துக்க மாட்டாங்க. என்கிட்ட யாரும் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை. அதையும் மீறி ஒரு சில விஷயம் நடந்தப்போ, எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக அவர்களிடம் சொல்லிவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More : ’2 சீரியலில் நடித்துவிட்டு 2 கோடிக்கு கார் வாங்குவது எப்படி’..? ’எல்லாமே அட்ஜஸ்ட்மெண்ட் தான்’..!!

Tags :
சினிமா செய்திகள்திரைப்படம்நடிகை சங்கீதாபிதாமகன்
Advertisement
Next Article