For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’..!! வீரப்பன் மனைவி சொன்ன பதில்..!!

08:11 AM Apr 09, 2024 IST | Chella
’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’     வீரப்பன் மனைவி சொன்ன பதில்
Advertisement

மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது மனைவி வேறு கட்சியில் உள்ளார்.

Advertisement

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி, கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசுகையில், "மக்களுக்காவும், தொகுதிக்காகவும் தருமபுரியில் செயல்பட்டு வருகிறேன். மக்களுக்கு செய்ய வேண்டிய கோரிக்கையை தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் போராடுவேன்.

என் மகள் முதலில் பாஜகவில் இருந்தார். இப்போது நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார். அது அவருடைய சிந்தனை, கொள்கை. சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அவர் அந்த கட்சியில் இணைவதற்கு முன்பு என்னிடம் கூறவில்லை. எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்கும்படி கூறினேன்" என்றார். மேலும், உங்களுடைய மகளுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "கட்சி என்பது வேறு, உறவு என்பது வேறு. நான் இப்போது வேறு கட்சியில் இருக்கிறேன். எங்களுடைய கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் இருக்கிறார். அதனை மீறி என்னால் போக முடியாது" என்றார்.

Read More : செம குட் நியூஸ்..!! TNPSC குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..!! உடனே செக் பண்ணுங்க..!!

Advertisement