முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்" ;சத்யபிரதா சாகு

05:08 PM Apr 15, 2024 IST | Mari Thangam
Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி 39 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில்  நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதியாக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தமிழகத்தில் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.  மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.  பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Tags :
election2024sathya pradha sagu
Advertisement
Next Article