For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுலபமாக வீட்டிலேயே சாம்பிராணி தயாரிக்கலாம்..!! இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க..!!

05:20 AM Apr 20, 2024 IST | Chella
சுலபமாக வீட்டிலேயே சாம்பிராணி தயாரிக்கலாம்     இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க
Advertisement

தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு மிக்கதாகும்.

Advertisement

தேவையான பொருட்கள் :

பச்சை கற்பூரம் 25 கிராம்

வெண் கடுகு 250 கிராம்

ஜவ்வாது 50 கிராம்

மருதாணி விதை 250 கிராம்

ஏலக்காய் 10 கிராம்

வேப்பிலை பொடி 50 கிராம்

வில்வ இலை பொடி 50 கிராம்

(மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

செய்முறை :

* மேற்கண்ட பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த சாம்பிராணி பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இதை வீட்டு பூஜையில் வைத்து தூபம் போட்டு வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

* அதுமட்டுமின்றி, இதில் வெண் கடுகு சேர்த்திருப்பதால் அவை உங்கள் வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டியை அடியோடு நீக்க உதவும். பச்சை கற்பூரம், ஏலக்காய், ஜவ்வாது உள்ளிட்ட பொருட்கள் பணத்தை வசியம் செய்யும் ஆற்றல் கொண்டது. மருதாணி விதை, வில்வ இலை, வேப்பிலை ஆகியவை வீட்டில் லட்சுமி கடாச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.

Read More : பயணிகள் செம குஷி..!! நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது..!! ரயில்வேயில் வரும் புதிய மாற்றம்..!!

Advertisement