முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களையும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்..!! ஏன் தெரியுமா..?

01:30 PM Dec 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

Advertisement

பிரபல பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரம் பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. குறுகிய தொகை கடன் வழங்குவதை பே.டி.எம். நிறுவனம் நிறுத்தியதன் எதிரொலியாகவும், இப்பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம்பணியாளர்கள்பேடிஎம் நிறுவனம்
Advertisement
Next Article