For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்..!! யாரும் வெளிய போகாதீங்க..!! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

01:18 PM Apr 23, 2024 IST | Chella
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்     யாரும் வெளிய போகாதீங்க     இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்தியாவிலேயே அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Advertisement