For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்..!! ஆக்ரோஷமாகும் கடல் அலைகள்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

08:37 AM Jan 04, 2024 IST | 1newsnationuser6
4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்     ஆக்ரோஷமாகும் கடல் அலைகள்     வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 5) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நாளை (ஜனவரி 5) வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement