For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் கர்ம வினை தீர்க்கும் பரிகாரம்..! முழு விவரம்..!

06:30 AM Feb 10, 2024 IST | 1newsnationuser5
அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் கர்ம வினை தீர்க்கும் பரிகாரம்    முழு விவரம்
Advertisement

நம் முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்களும், நன்மைகளும் ஏழேழு ஜென்மங்களுக்கும் கர்மாவாக தொடர்ந்து நம்மை பின்பற்றி வரும். இதையேதான் கர்ம வினை என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னதான் பலருக்கும் பல நன்மைகள் தொடர்ந்து செய்து வந்தாலும் கெட்டது மட்டுமே நடக்கிறதா அப்படி என்றால் கர்மவினை பலனை அடைகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Advertisement

மேலும் கர்ம வினைகளை நீக்கும் சக்தி கொண்டவர் விநாயகர். இவர் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கி நமக்கு மோட்சம் அளிப்பார் என்று நம்பப்பட்டு வருகிறது. விநாயகரை எப்படி வழிபட்டால் கர்மவினை நீங்கும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

விநாயகரின் மறு உருவமான அரச மரத்தின் இலைகளை பறித்து அரசமரத்து விநாயகருக்கு வேண்டுதல் செய்தால் வேண்டியவைகள் யாவும் கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் இந்த கர்ம வினை தீர்க்கும் பரிகாரமும், கர்ம வினையை தீர்க்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.

முதலில் அரசமர இலையை பறித்து நன்றாக சுத்தம் செய்து தாம்பூல தட்டில் விநாயகருக்கு முன்பாக வைக்க வேண்டும். தாம்பூல தட்டிற்கும் அரச மர இலைக்கும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பின்பு அந்த இலையில் அகல் விளக்கு வைத்து மஞ்சள்நிற திரியிட்டு விளக்கு பொருத்த வேண்டும். இந்த விளக்கை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பொருத்தி விநாயகருக்கு ஆராதனை செய்து வந்தால் கர்ம வினை நீங்கி வாழ்வில் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும்.

Tags :
Advertisement