Modi: உலகின் முதல் வேத கடிகாரம் இன்று திறப்பு!… அம்சங்கள் என்ன தெரியுமா?
Modi: மத்திய பிரதேசத்தில் பண்டைய இந்திய பாரம்பரிய பஞ்சாங்கத்தின் (நேர கணக்கீட்டு முறை) படி நேரத்தை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் வேத கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில் உஜ்ஜயினியின் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள 85 அடி கோபுரத்தில் 'விக்ரமாதித்ய வேதக் கடிகாரம்' நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் வேத கடிகாரம் என்று கூறப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த கடிகாரத்தின் அம்சங்கள் என்னென்ன என்பதையும் தெரிந்துகொள்வோம்.
வேதிக் கடிகாரம்' வேத இந்து பஞ்சாங்கம், கிரக நிலை, முஹுரத், ஜோதிடக் கணக்கீடுகள் மற்றும் கணிப்புகள் தொடர்பான தகவல்களைக் காண்பிக்கும் மற்றும் IST மற்றும் GMT ஆகியவற்றைக் குறிக்கும். கடிகாரம், சம்வத், மாஸ், சந்திரனின் நிலை, பர்வா, ஷுப்ஷுப் முஹுராத், காதி, நட்சத்திரம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற தகவல்களையும் காண்பிக்கும். ஒரு சூரிய உதயத்திற்கு அடுத்த சூரிய உதயத்தின் அடிப்படையில் கடிகாரம் நேரத்தைக் கணக்கிடும்.
இந்திய நேரக் கணக்கீட்டு முறையானது உலகின் மிகப் பழமையான, நுட்பமான, தூய்மையான, பிழை இல்லாத, உண்மையான மற்றும் நம்பகமான முறையாகும். இந்த மிகவும் நம்பகமான முறை உஜ்ஜயினியில் விக்ரமாதித்யா வேத கடிகாரத்தின் வடிவத்தில் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது" என்று ஒரு அறிக்கை கூறுகிறது. .
"உலகம் முழுவதும், உஜ்ஜயினியிலிருந்து (உஜ்ஜயினி) பரிந்துரைக்கப்பட்ட மற்றும் அனுப்பப்பட்ட நேரம் பின்பற்றப்படுகிறது. இந்திய வானியல் கோட்பாடு மற்றும் கிரக விண்மீன்களின் இயக்கங்களின் அடிப்படையில் இந்திய நேரக் கணக்கீடுகளில் மிகக் குறுகிய காலப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது" என்றும் கூறப்படுகிறது. வேதக் கடிகாரம் என்பது இந்திய நேரக் கணக்கீட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.