For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கதற கதற கழுத்தறுத்து படுகொலை.! மாடர்ன் ட்ரெஸ்ஸால் வந்த வினை.! கணவருக்கு வலைவீச்சு.!

07:38 PM Jan 03, 2024 IST | 1newsnationuser7
கதற கதற கழுத்தறுத்து படுகொலை   மாடர்ன் ட்ரெஸ்ஸால் வந்த வினை   கணவருக்கு வலைவீச்சு
Advertisement

மாடர்ன் டிரஸ் அணிந்ததற்காக மனைவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான 6 மாதத்தில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் காசர் மாவட்டத்தில் உள்ள ராம்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நாளிலிருந்து இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜோதி மாடன் டிரஸ் அணிவது அவரது கணவன் ஜீவனுக்கு பிடிக்கவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் ஜோதி கணவனின் பேச்சை மீறி மாடல் டிரஸ் அணிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவன் தனது மனைவியை வெளியே செல்வதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் காட்டுப்பகுதிக்குச் சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மனைவியின் கழுத்தை கொடூரமாக அறுத்து படுகொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அப்பகுதியில் செல்பவர்கள் இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய அவரது கணவர் ஜீவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement