For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ச்சீ.. நீயெல்லாம் ஒரு அப்பா.." 15 வயது மகளிடம் பாலியல் சேட்டை.! தந்தை மீது பரபரப்பு புகார்.!

12:17 PM Dec 05, 2023 IST | 1newsnationuser4
 ச்சீ   நீயெல்லாம் ஒரு அப்பா    15 வயது மகளிடம் பாலியல் சேட்டை   தந்தை மீது பரபரப்பு புகார்
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் தன் மகளிடமே தவறான முறையில் நடந்து கொண்ட தந்தையை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குழந்தையின் தாய் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்திருக்கிறார்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ஊர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் முருகன். இவர் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். திருமணமான இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் செல்வ முருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணவேணி அவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது இளைய மகள் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியாக இல்லாமல் அவதிப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் வந்த தந்தை செல்வம் முருகன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .

எனினும் அந்தப் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தந்தை மற்றும் மகளுடன் வந்து புகார் மனுவை அளித்தார். தனக்கும் தனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லை எனவும் இந்த புகார் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கும் படியும் காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement