முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நண்பர்களுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.!

01:34 PM Dec 26, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அவரது காதலன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடும்பூர் ஊராட்சியில் டேங்கர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் மாமல்லன். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மாமல்லன் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். இந்தக் கள்ளத் தொடர்பு காரணமாக தனது ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சிதம்பரத்தில் குடியேறி இருக்கிறார் மாமல்லன்.

இந்நிலையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார் அவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து நெடும்பூருக்கு வேலைக்கு சென்று வந்த மாமல்லன் சாலை ஓரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகாலட்சுமியை கைது செய்து விசாரித்ததில் உண்மை வெளியாகியிருக்கிறது.

மகாலட்சுமி தனது கள்ளக்காதலனின் நண்பர்களான நாகராஜன் மற்றும் இளவேந்தன் ஆகியோருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
crimecuddaloreEMAMan Murderedtn
Advertisement
Next Article