முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளக்காதலில் ஒரு கள்ளத்தொடர்பு.! தட்டி கேட்ட காதலன் கொடூர கொலை.! கூலிப்படை ஏவி காதலி வெறி செயல்.!

01:28 PM Dec 15, 2023 IST | 1newsnationuser4
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளக்காதலன் கண்டித்ததால் அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மனைவி பிரியா(25) இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தனியார் கொரியரில் வேலை பார்க்கும் கோபால கிருஷ்ணன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணனுக்கு வேலை அதிகம் இருந்ததால் பிரியாவை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பிரியா வேறொரு நபருடன் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதனை கோபாலகிருஷ்ணன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக்காதலனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

தனது திட்டத்தின் படி ஆயர்பாடி பகுதிக்கு கோபாலகிருஷ்ணனை வரவழைத்த பிரியா அங்கு மறைந்திருந்த நான்கு கூலிப்படையினரை ஏவி காதலனை வெட்டி படுகொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர. மேலும் தலைமறைவாக இருந்த பிரியா கைது செய்யப்பட்ட நிலையில் கூலிப்படையினர் நான்கு பேரை காவல்துறை தேடி வருகிறது.

Tags :
crimeIllicit affairmurderponneriThiruvallur
Advertisement
Next Article