For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Viral Video | ஆசை ஆசையாய் போட்ட பூக்கோலம்.. ஒரே நிமிடத்தில் காலால் அழித்த பெண்..!! - நெட்டிசன்கள் கண்டனம்

Woman Destroying Pookalam At Bengaluru Apartment Complex During Onam Draws Ire
06:47 PM Sep 23, 2024 IST | Mari Thangam
viral video   ஆசை ஆசையாய் போட்ட பூக்கோலம்   ஒரே நிமிடத்தில் காலால் அழித்த பெண்       நெட்டிசன்கள் கண்டனம்
Advertisement

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண், ஓணம் பண்டிகையையொட்டி குழந்தைகளால் உருவாக்கப்பட்ட பூக்கோலத்தை சேதப்படுதிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அப்பெண்ணிற்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertisement

ஹெக்டே நகரில் உள்ள மோனார்க் செரினிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் இந்த சம்பவம் நடந்துள்ளது, இணையத்தில் பரவும் வீடியோ ஒன்றில், சிமி நாயர் என்ற பெண், பூக்கோலத்தை அழிக்கும் போது குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணலாம்.

ஓணம் பண்டிகையின் நேசத்துக்குரிய அங்கமான பூக்கோளம் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் குறிக்கிறது. ஒணம் பண்டிகையை முன்னிட்டு, அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இணைந்து பூக்கோலம் இட்டுள்ளனர். அதே குடியிருப்பில் வசிக்கும் பெண் அங்குள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்குள்ள ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

வைரலான வீடியோவில், அந்த பெண் கொண்டாட்டத்தின் முயற்சிகள் மற்றும் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது போல பேசினார். பின்னர் பூக்கோலம் இட்டதற்கு குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, பூக்கோலத்தை காலால் மிதித்துள்ளார். வீடியோ இணைத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த பெண்ணிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஓணம் என்பது நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாக இருந்தாலும், பெங்களூரில் நடந்த இந்த சம்பவம் திருவிழாவின் சாரத்திற்கு முற்றிலும் மாறாக நிற்கின்றன, குழந்தைகள் உருவாக்கிய ரங்கோலிக்கு எதிராக வேண்டுமென்றே அழிக்கும் செயலைக் காட்டுகின்றன.

Read more ; 2025 முதல் 5079 வரை.. மிரள வைக்கும் பாபா வங்காவின் பகீர் கணிப்புகள்..!!

Tags :
Advertisement