முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடத்தையில் சந்தேகம்.! தலையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த கணவன்.!!

06:03 AM Dec 15, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு அவரது தலையுடன் காவல் நிலையம் வந்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Advertisement

ஒடிசா மாநிலத்தின் நாயகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான அர்ஜுன் பாகா என்பவர் தனது மனைவி தரித்ரி என்பருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் நடத்தையில் அர்ஜுனுக்கு அடிக்கடி சந்தேகம் இருந்து வந்ததாக தெரிகிறது. மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கருதி அவரிடம் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் .

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இருவருக்கிடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற ஆத்திரத்தில் இருந்த அர்ஜுன் தனது மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது தலையுடன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தலை இல்லாத அவரது மனைவியின் உடலை கைப்பற்றி தலையுடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் தலை துண்டிக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
crimeHusband SurrendermurderodissaSevered Head
Advertisement
Next Article