முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி.. "ஹனிமூனா, ஆன்மீக சுற்றுலாவா? அயோத்தி ராமரால் வந்த வினை."! விவாகரத்து கேட்டு இளம்பெண் வழக்கு பதிவு.!

07:12 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
Advertisement

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்றதால் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Advertisement

இருவரும் நல்ல வேலையில் உள்ள நிலையில் தேனிலவிற்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டும் என மனைவி தெரிவித்திருக்கிறார். எனினும் வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் என கணவர் தெரிவித்துள்ளார். இதற்கு மனைவியும் சம்மதித்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி மற்றும் வாரணாசி சுற்றுலா செல்ல புக் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது தனது பெற்றோர் பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அயோத்தி மற்றும் வாரணாசிக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர். சுற்றுப்பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அந்தப் பெண் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்புள்ளார். மேலும் தன்னுடைய மனுவில் தனது கணவர் தன்னை சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றும் அவரது பெற்றோரை அதிக கவனம் எடுத்து பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
bhopaldivorceHoneyMOONindiaram temple
Advertisement
Next Article