முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிருஷ்ணகிரி: " 'கிரிக்கெட் பேட்' டால் அடித்து கணவன் கொலை.."! போதையில் தகராறு செய்ததால் மனைவி மாமியார் வெறி செயல்.!

05:00 PM Feb 20, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் மது புழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் அவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற விமல் குமார் தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார்

அப்போது கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக முற்றி இருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த விமல் குமார் தனது மனைவியை அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மனைவி பூர்ணிமா மற்றும் அவரது தாயார் இருவரும் சேர்ந்து விமல் குமாரை வீட்டிலிருந்த கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த விமல் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பூர்ணிமா மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் விசாரணை செய்து வருகிறது.

English Summary: Man was murdered by his wife and mother-in-law due to domestic violence.

Read More: KARNATAKA| காப்பி அடித்ததை கண்டித்ததால் விபரீதம்.! கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.!

:

Tags :
#Policehusbandkrishnagiriwife attack
Advertisement
Next Article