முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனி குடித்தனம் போலாமா.? ஆசை காட்டி கணவன் படுகொலை.! இளம் பெண் கைது.!

02:34 PM Dec 19, 2023 IST | 1newsnationuser4
Advertisement

ஆந்திர மாநிலத்தில் தனி குடித்தனம் அழைத்துச் செல்லப்பட்ட கணவனை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காதலனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Advertisement

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுறுவாடா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(35) இவரது தம்பியான கோவிந்த் என்பவருக்கு மானசா என்ற பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தனி குடித்தனம் வேண்டும் என்று கணவனை வற்புறுத்தி இருக்கிறார் மானசா. இதனால் கடந்த 15ஆம் தேதி கணவன் மற்றும் மனைவி இருவரும் தனி குடித்தனம் வந்துள்ளனர்.

இந்நிலையில் 16ஆம் தேதி தனது கணவரின் சகோதரருக்கு போன் செய்த மானசா கடன் தொல்லையால் கோவிந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் கோவிந்த் வீட்டிற்கு சென்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊர் எடுத்துச் சென்றனர். அப்போது கோவிந்தன் கழுத்தில் காயமிருப்பதை கண்டு சந்தேகமடைந்த பாஸ்கர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மானசா தனது காதலன் சிம்மாதிரியுடன் சேர்ந்து கோவிந்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் மானசா சிம்மாதிரியை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததாகவும் அவரது விருப்பத்தை மீறி கோவிந்துடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்த அவரை கைது செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள அவரது காதலனை தேடி வருகிறது.

Tags :
andhraEMAmurdertirupathiWife Arrested
Advertisement
Next Article