For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தோழிகளுடன் மது விருந்து..!! நடிகையுடன் தகாத உறவு..!! சந்தேகத்தால் உடைந்து போன உறவு..!! ஆர்த்தி இப்படிப்பட்டவரா..?

Aarti used to go to Madhu Puruwa for night party with her friends later.
02:37 PM Sep 12, 2024 IST | Chella
தோழிகளுடன் மது விருந்து     நடிகையுடன் தகாத உறவு     சந்தேகத்தால் உடைந்து போன உறவு     ஆர்த்தி இப்படிப்பட்டவரா
Advertisement

சினிமா துறையை பொறுத்தவரை நைட் பார்ட்டிகளுக்கு செல்வதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயம். நைட் பார்ட்டி, இரவு விருந்து, போதை விருந்து உள்ளிட்டவற்றில் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கணவன் - மனைவியாக ஆகிவிட்ட பின்னரும் இதை ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் இருப்பதே சினிமாவை சார்ந்த பிரபலங்களின் கலாச்சாரமாக இருக்கிறது.

Advertisement

அப்படித்தான் நைட் பார்ட்டிகளுக்கு செல்வதை தன்னுடைய கணவர் ஜெயம் ரவி கண்டும் காணாமல் இருந்து விடுவார் என நினைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆர்த்தி. ஆனால், அதுவே பெரிய வினையாக மாறிவிட்டது. குடும்பப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்து வந்த ஆர்த்தி, பின்னாளில் தன் தோழிகளுடன் சேர்ந்து நைட் பார்ட்டிக்கு மது விருதுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

இது ரவிக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது. இதற்கிடையே, தொடர் தோல்வி படங்களால் மனைவி ஆர்த்தி வீட்டில் தன்னை மதிப்பதில்லை என்றும் படத் தோல்வியை சந்தித்ததால் மன அழுத்தத்தில் ஜெயம் ரவி இருந்து வந்தாராம். அந்த சமயத்தில், இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என வெளிவரும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், மனைவி ஆர்த்தியோ இந்த பிரச்சனையை திசை மாற்றும் விதமாக ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வேறொரு நடிகையுடன் தகாத உறவில் இருப்பதாக வெளிவந்த கிசுகிசு செய்திகள் குறித்து தொடர்ந்து அவரை சந்தேகித்து, கேள்வி எழுப்பி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இது குறித்து தன்னுடைய அறிக்கையில், 15 வருட திருமண பந்தத்தில் ஒரு நிமிடம் கூட என்னால் இது போன்ற ஒரு முடிவை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால், ஜெயம் ரவி துணிந்து விவாகரத்தை அறிவித்து விட்டார். அவரால் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. இனி என்னுடைய குழந்தைகள் யாரை அப்பா என்று அழைப்பார்கள்? என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியை இப்படி ஒரு முடிவு எடுக்கத் தூண்டி விட்டது யார்? என மனைவி ஆர்த்தியை போன்றே ரசிகர்கள் எல்லோருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! ஆதாரை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tags :
Advertisement