For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீதி கிடைக்குமா?. மருத்துவர் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு!. இன்று மசோதா நிறைவேற்றம்!

Will there be justice? Dr. hanged for the perpetrators of brutality! Today Passage of the bill!
08:11 AM Sep 03, 2024 IST | Kokila
நீதி கிடைக்குமா   மருத்துவர் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு   இன்று மசோதா நிறைவேற்றம்
Advertisement

Rape: மேற்குவங்கம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.

Advertisement

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக மருத்துவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மேற்குவங்க சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது. இதில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டது. இரண்டாம் நாளான இன்று மசோதா மீது விவாதம் நடத்திய பின் நிறைவேற்றப்பட உள்ளது.

Readmore: கொட்டித் தீர்க்கும் கனமழை!. காவிரியில் 19,065 கன அடி நீர் திறப்பு!

Tags :
Advertisement