மீண்டும் மீண்டுமா..? 27-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 18ஆம் தேதி (நேற்று) திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மாா்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 27-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More : BJP உடன் கூட்டணி வைத்தது பாமக..!! 10 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி..!!