For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடுமையின் உச்சம்.." 12 வருடமாக வீட்டுக்குள் சிறை.! 3 பூட்டுகள், கழிவறைக்கு ஒரு சிறு பெட்டி.! ஷாக்கிங் செய்தி.!

11:12 AM Feb 03, 2024 IST | 1newsnationuser4
கொடுமையின் உச்சம்    12 வருடமாக வீட்டுக்குள் சிறை   3 பூட்டுகள்  கழிவறைக்கு ஒரு சிறு பெட்டி   ஷாக்கிங் செய்தி
Advertisement

கர்நாடகாவில், 12 வருடங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட மனைவி போலீசாரால் மீட்கப்பட்டார். கழிவறை தேவைகளுக்காக ஒரு சிறிய பெட்டியை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணவர் மீது வழக்கு தொடுக்க அந்த மனைவி மறுத்துவிட்டார். இது குறித்து போலீசார் கணவன் மனைவி இருவருக்கும் ஆலோசனை வழங்கினார்.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அவரது கணவர் 12 வருடங்களாக வீட்டில் வைத்து பூட்டி உள்ளார். கழிவறை தேவைகளுக்காக அந்த அறையில் இருந்த ஒரு சிறிய பெட்டியை பயன்படுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்தார்.

அந்தக் கணவர் இந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு செல்லும் முன் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிடுவார். அவரது கணவர் வீடு திரும்பும் வரை, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகள் வாசலிலேயே காத்திருப்பார்கள். ஜன்னல் வழியாக அந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் அதிக நபர்கள் இல்லாததால், இந்தப் பெண் அனுபவித்த சித்திரவதைகள் 12 ஆண்டுகளாக வெளிச்சத்திற்கு வரவில்லை. அந்தப் பெண்ணை தற்போது போலீசார் மீட்டுள்ளனர். தனது கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் தான் தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் மனதை உலுக்கியது.

Tags :
Advertisement