For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருச்சி: "சீர்வரிசைக்கு பதிலாக கட்டிய தாலி.." சிக்கிய கடிதம்.! காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.! நொந்துபோன கணவர்.!

05:01 PM Feb 07, 2024 IST | 1newsnationuser4
திருச்சி   சீர்வரிசைக்கு பதிலாக கட்டிய தாலி    சிக்கிய கடிதம்   காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி   நொந்துபோன கணவர்
Advertisement

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரபுவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஜெயபிரபு அதிர்ச்சியுற்றார். வீட்டில் சுகன்யாவைக் காணவில்லை. பல இடங்களிலும் தேடிய ஜெயபிரபு சுகன்யாவின் பாதுகாப்பை நினைத்து அஞ்சினார். பின்னர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போது, சுகன்யா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் சுகன்யா, ஜெயபிரபுவை பிடிக்கவில்லை என்றும் தங்கள் வீட்டில் செய்த சீர்வரிசைக்கு பதிலாக ஜெயபிரபு கட்டிய தாலியை எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சுகன்யா, ஏற்கனவே காதலித்து திருமணம் செய்த குமார் என்பவர் உடன் சென்று விட்டதாக காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனால் ஜெயபிரபு மனச்சோர்வு அடைந்தார். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement