முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மொட்டை கிருஷ்ணனிடம் உங்கள் மனைவி அடிக்கடி போனில் பேசியது ஏன்’..? இயக்குனர் நெல்சனிடம் தீவிர விசாரணை..!!

It has been reported that the police interrogated director Nelson for more than an hour in relation to the Armstrong murder case.
12:14 PM Aug 24, 2024 IST | Chella
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவரது தொலைப்பேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பு, மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன்பு என மோனிஷா அடிக்கடி கிருஷ்ணனுடன் தொலைப்பேசியில் பேசியிருப்பதை கண்டறிந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மோனிஷாவின் கணவர் இயக்குனர் நெல்சனிடமும் இன்று போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நெல்சனின் வீட்டுக்கு நேரில் சென்று மோனிஷா, மொட்டை கிருஷ்ணனிடம் அடிக்கடி எதற்காக பேசினார் என்பது குறித்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக நெல்சனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Read More : அதிர்ச்சி..!! அரசுப் பள்ளியில் அடிதடி..!! பரிதாபமாக உயிரிழந்த 11ஆம் வகுப்பு மாணவன்..!!

Tags :
நெல்சன்மொட்டை கிருஷ்ணன்மோனிஷா
Advertisement
Next Article